தக்காளி சாதம்
Wednesday,March 11, 2009
தக்காளி சாதம் (1)
தேவையான பொருட்கள்
அரிசி – 300 கிராம், தக்காளி – மீடியம் சைஸ் 6, வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 3, பூண்டு – 15 பற்கள், இஞ்சி, கிராம்பு – 4, பட்டை, ஏலக்காய் – 2, வெண்ணெய் – 25 கிராம், கொத்தமல்லித் தழை
செய்முறை
அரிசியை நன்றாக அலம்பி, களைந்து கொள்ளவும். தண்ணீரை இருத்துவிட்டு, அரிசியை 10 நிமிஷம் உலர்த்திக் கொள்ளவும்.
இஞ்சி, 5 பற்கள் பூண்டு, ப-மிளகாய் இவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெய் போட்டு, சூடானதும் அதில் பொடித்த கிராம்பு, ஏலக்காய், பட்டை ஆகியவைகளைப் போட்டு, வறுக்கவும். நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்னர் இஞ்சி பூண்டு மிளகாய் விழுதை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
களைந்து, உலர்த்திய அரிசியை போட்டு கொஞ்சம் வறுத்துக் கொள்ளவும். தக்காளிப் பழங்களை மிக்ஸியில் அரைத்து, அரிசியில் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். (ஏற்கனவே தக்காளி சாறு ஊற்றியிருப்பதை ஞாபகம் வைத்துக்கொண்டு தண்ணீர் சேர்க்கவும்). உப்பு சேர்க்கவும்.
குக்கரை மூடி, 3 விசில் வரும்வரை சாதத்தை வேகவிடவும். குக்கர் ஆறியதும், கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி சாதத்தில் சேர்க்கவும்.
இது ராஜப்பா தயாரிப்பு
11 March 2009
Trackback this post | Subscribe to the comments via RSS Feed