Posts Tagged பூண்டு
தக்காளி சாதம்
தக்காளி சாதம் (1)
தேவையான பொருட்கள்
அரிசி – 300 கிராம், தக்காளி – மீடியம் சைஸ் 6, வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 3, பூண்டு – 15 பற்கள், இஞ்சி, கிராம்பு – 4, பட்டை, ஏலக்காய் – 2, வெண்ணெய் – 25 கிராம், கொத்தமல்லித் தழை
செய்முறை
அரிசியை நன்றாக அலம்பி, களைந்து கொள்ளவும். தண்ணீரை இருத்துவிட்டு, அரிசியை 10 நிமிஷம் உலர்த்திக் கொள்ளவும்.
இஞ்சி, 5 பற்கள் பூண்டு, ப-மிளகாய் இவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெய் போட்டு, சூடானதும் அதில் பொடித்த கிராம்பு, ஏலக்காய், பட்டை ஆகியவைகளைப் போட்டு, வறுக்கவும். நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்னர் இஞ்சி பூண்டு மிளகாய் விழுதை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
களைந்து, உலர்த்திய அரிசியை போட்டு கொஞ்சம் வறுத்துக் கொள்ளவும். தக்காளிப் பழங்களை மிக்ஸியில் அரைத்து, அரிசியில் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். (ஏற்கனவே தக்காளி சாறு ஊற்றியிருப்பதை ஞாபகம் வைத்துக்கொண்டு தண்ணீர் சேர்க்கவும்). உப்பு சேர்க்கவும்.
குக்கரை மூடி, 3 விசில் வரும்வரை சாதத்தை வேகவிடவும். குக்கர் ஆறியதும், கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி சாதத்தில் சேர்க்கவும்.
இது ராஜப்பா தயாரிப்பு
11 March 2009
Add comment Wednesday,March 11, 2009
Aloo Dhum
ALOO DHUM
பொருட்கள்
சின்ன உருளை – 4, தக்காளி – 2, வரமிளகாய் – 4, வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பொடித்த ஏலக்காய், கிராம்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் – 1/2 டீஸ்பூன் தலா
உப்பு, எண்ணெய்
செய்முறை
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை உப்பு, மஞ்சள் சேர்த்து வேகவைத்து, தோல் உரித்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, வரமிளகாயுடன் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வெந்த உ.கிழங்கில் FORK கொண்டு துளையிடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது, ஏலக்காய், கிராம்பு போட்டு வதக்கவும்.
மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, அதில் அரைத்த விழுதை போட்டுக் கிளறவும்.
வெந்த உ.கிழங்கை போட்டு வதக்கவும்.
தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும்.
நன்றாக கொதித்ததும் கொத்துமல்லி போட்டு இறக்கவும்
ராஜப்பா
25-01-2009, 17:50 மணி
** நன்றி: ஆனந்தவிகடன், 28-01-2009 இதழிலிருந்து
Add comment Sunday,January 25, 2009
Paneer butter Masala
பனீர் பட்டர் மசாலா
பொருட்கள்
பனீர் – 200 கி, வெண்ணெய் – 1 டேஸ்பூன், தக்காளி – 3
வெங்காயம் – 2, முந்திரி – 5-8, கசகசா – 1 டீஸ்பூன்,
வெந்தயக்கீரை (காய்ந்தது) – 1 டீஸ்பூன் (கீரையை தண்ணீரில் ஊறவைக்கவும்)
பால் – 1/2 கப், எண்ணெய், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள்,
மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் – தலா 1 டீஸ்பூன்
சர்க்கரை – 1 சிட்டிகை, உப்பு
அரைக்க: இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய்
செய்முறை
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
நறுக்கிய தக்காளியை அரைத்துக் கொள்ளவும்
முந்திரி, கசகசா, மேதி மூன்றையும் அரைத்துக் கொள்ளவும்
மசாலா பொருட்களையும் அரைத்துக் கொள்ளவும்
பனீரை சிறு துண்டங்களாக் பொரித்துக் கொள்ளவும்
கடாயில் வெண்ணெய் போட்டு சூடானதும், வெங்காயம் போட்டு வதக்கவும்
அதில் அரைத்த மசாலா விழுதை சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளி விழுது, உப்பு சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்ததும், பாலை சேர்க்கவும்,
முந்திரி விழுதை சேர்த்து, பொரித்த பனீரையும் போடவும்.
கொஞ்சம் கொதித்ததும் இறக்கி, பரிமாறவும்
ராஜப்பா
25-01-2009 17:00 PM
** நன்றி: ஆனந்தவிகடன், 28-01-2009 இதழிலிருந்து
Add comment Sunday,January 25, 2009
காய்கறி சூப்
காய்கறி சூப்
தேவையான பொருட்கள்
காரட் – 2 நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
சிறிய சைஸ் உருளைக்கிழங்கு – 1 நறுக்கியது
தண்ணீர் – 2 கப்
பூண்டு – 1 நசுக்கியது
ஆரஞ்சுப்பழ சாறு – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை-பொடி – 1/2 டீஸ்பூன்
தக்காளிக் கூழ் 1 டேபிள்ஸ்பூன்
ஸ்கிம் பால் – 1 கப்
ஸ்பிரிங் ஆனியன் – 1 டேஸ்பூன் நறுக்கியது
வெண்ணெய் — 1/2 டீஸ்பூன்
உப்பு
செய்முறை
காய்கறிகளை (வெங்காயம், உருளை, காரட், பூண்டு) குறைந்த தீயில் வேகவைத்துக் கொள்ளவும்.
ஆரஞ்சு சாறு, கறிவேப்பிலை பொடி, தக்காளி கூழ், பால் சேர்க்கவும்.
மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்
வெண்ணையை சூடு பண்ணி, ஸ்பிரிங் ஆனியனை போட்டு கிளறவும்.
அரைத்த விழுதைப் போட்டு, கொதிக்க விடவும்.
சூப்பை சூடாகப் பரிமாறவும்.
ராஜப்பா
25–01-2009 11 மணி
Add comment Sunday,January 25, 2009
பாலக் பனீர் (2)
பாலக் பனீர்.
தேவையான பொருட்கள்
பாலக் கீரை – 3 கட்டுகள், சுத்தப்படுத்தி, அலம்பி, நறுக்கியது
பனீர் – 100 கி
வெங்காயம் – 1
வெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை – 3 அல் 4
ஜீரகம் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு
மிளகுத்தூள் 1/4 டீஸ்பூன்
பூண்டு – இஞ்சி விழுது 3/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது 1/2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
பாலக் கீரையுடன், பூண்டு இஞ்சி விழுது, மிளகாய் விழுது சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு, நன்கு பிசைந்து கொள்ளவும்.
இந்தக் கலவையை குக்கரில் போட்டு, 7-8 நிமிஷம் வேக விடவும்.
ஆறியபின், மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பனீரை துண்டங்களாக (cubes) நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணை விட்டு, பனீர் துண்டங்களை பொரிக்கவும்.
இன்னொரு வாணலியில், வெண்ணெயை உருக்கி ஜீரகத்தையும், பிரிஞ்சி இலையையும் வதக்கவும்.
நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
உப்பு, மிளகுத்தூள், கரம் மசாலா சேர்க்கவும்.
பொரித்த பனீரையும், பாலக் கீரைவிழுதையும் போட்டு கொஞ்சம் கொதிக்க விடவும்.
ராஜப்பா 24-01-2009
Add comment Saturday,January 24, 2009
பாலக் பனீர் (1)
பாலக் பனீர்
தேவையான பொருட்கள்.
பாலக் கீரை – 2 கட்டு, சுத்தப்படுத்தி, நறுக்கியது
பனீர் – 100 கி
பூண்டு – 1 நசுக்கியது
1/2 டீஸ்பூன் இஞ்சி, துருவியது
பச்சை மிளகாய் – 2 நசுக்கியது.
1/4 டீஸ்பூன் ஜீரகம்
சர்க்கரை 1/4 டீஸ்பூன்
கோதுமை மாவு – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி
லவங்கப்பட்டை பொடி
பெருங்காயம்
கரம் மசாலாத்தூள்
உப்பு
எலுமிச்சம் பழச் சாறு, கொஞ்சம்
செய்முறை
பாலக் கீரையை நன்கு அலம்பிக்கொள்ளவும். கொஞ்சம் தண்ணீரில் கீரையை வேக விடவும்.
தண்ணீரை இருத்துவிட்டு, ஆறியபின், கோதுமை மாவு, இஞ்சி, பூண்டு, ப.மிளகாயுடன் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியை சூடாக்கி, ஜீரகத்தை லேசாக வறுக்கவும்.
கீரை விழுதையும்,பெருங்காயத்தையும் சேர்ககவும்.
பனீரைத் தவிர மற்ற எல்லா மசாலாவையும் சேர்க்கவும்
வாணலியை மூடி, 3-4 நிமிஷம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
பனீரை சேர்த்து, லேசாக கலக்கவும். எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
மேலும் 2 நிமிஷம் கொதித்தவுடன், இறக்கவும்.
ராஜப்பா 24-01-2009
Add comment Saturday,January 24, 2009
எண்ணெய் கத்தரிக்காய் காரக்குழம்பு
எண்ணெய் கத்தரிக்காய் காரக்குழம்பு
மிகச்சிறிய வயலெட் நிற கத்தரிக்காய் – 150 கி
சின்ன வெங்காயம் – 100 கி
பூண்டு – 12; தக்காளி – 4
வரமிளகாய் – 4
கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், வெந்தயம் – தலா 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
அரைக்க:
தேங்காய்த்துருவல் 1/2 கப், முந்திரி – 6
செய்முறை
கத்தரிக்காயை நன்கு அலம்பி, காம்புடன் பூ போல வெட்டிக்கொள்ளவும்.
பூண்டை உரித்து, தட்டிக்கொள்ளவும்.
தேங்காய், முந்திரியை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உ பருப்பு, சோம்பு, சீரகம், வரமிளகாய், போட்டு வதக்கவும்.
இதில் சின்ன வெங்காயம், கத்தரிக்காய் சேர்த்து வதக்கி, கத்தரிக்கய் வெந்ததும், புளியை கெட்டியாக கரைத்து அதில் சேர்த்து, நன்றாக கொதிக்கவிடவும்.
எண்ணெய் மேலாக பிரிந்து வந்ததும், அரைத்த தேங்காய்-முந்திரி விழுதை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
** நன்றி – ஆனந்தவிகடன் 07-01-2009 இதழ்
Add comment Friday,January 9, 2009
பூண்டுக் குழம்பு
பூண்டுக் குழம்பு
பூண்டு, புளி – தலா 200 கிராம்
சின்ன வெப்க்காயம் – 100 கி
பெரிய வெங்காயம், தக்காளி – தலா 150 கி (பொடிசாக நறுக்கியது)
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
சீரகம், மிளகுத்தூள் – தலா 50 கி (7 – 8 டீஸ்பூன்)
உப்பு, ந எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை
பூண்டு, வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும்.
நஎண்ணெயை காய வைத்து, பூண்டு, சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
பிறகு, நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து 2 நிமிஷம் வதக்கவும்.
இதில் சீரகத்தூள்,மிளகுத்தூள் சேர்த்து புளியை கெட்டியாக கரைத்து விட்டு, 10 நிமிஷம் கொதிக்கவிடவும்.
எண்ணெய் மேலாக பிரிந்து வரும்போது இறக்கி, கறிவேப்பிலை போடவும்
** நன்றி – ஆனந்தவிகடன் 07-01-2009 இதழ்
Add comment Friday,January 9, 2009
செட்டி நாடு சுண்ட வத்தக் குழம்பு
செட்டி நாடு சுண்ட வத்தக் குழம்பு
தேவையானவை
வெந்தயம், சோம்பு, சீரகம், கடுகு, மஞ்சள்தூள், தனியா தூள், தலா 1 டீஸ்பூன்;
பூண்டு, சாம்பார் வெங்காயம் – தலா 10
வர மிளகாய் – 4
மிளகாய்த்தூள் – காரத்திற்கேற்ப (~~ 2 டீஸ்பூன்)
கறிவேப்பிலை
புளிக்கரைசல் – எலுமிச்சை அளவு
நெய் – சிறிதளவு ந-எண்ணெய், காய்ந்த சுண்டைக்காய் (வத்தல்)
செய்முறை
சுண்டைக்காயை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
நல்லஎண்ணெய் விட்டு, காய்ந்த பிறகு, கடுகு, வெந்தயம், சோம்பு, சீரகம், பூண்டு, சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலக மிதந்து வந்ததும் இறக்கவும். பிறகு வறுத்த சுண்டை வத்தலை போட்டுக் கலக்கவும்
** நன்றி – ஆனந்தவிகடன் 07-01-2009 இதழ்
Add comment Friday,January 9, 2009
KHUSHKA
Khushka
Ingredients
1. Any raw rice (I prefer sona masoori) - 2 cups ( 300 Gms)
2. Onion (cut lengthwise) - 2 medium size
3. Tomato (chop finely) - 2 medium size
4. Injhi Paste - 1 Tablespoon
5. Poondu Paste - 1 Tablespoon
6. Pudhina leaves - One handful
7. Grambu - 3 to 4 pcs
8. Pattai - 2 pcs of 2 cm long
9. Bay leaves - 2 to 3 leaves
10. Pachchai Milagai ( Don’t cut , only slit) - 2 to 3
11. Oil - 4 tablespoon
12. Salt - as per taste
13. Food color (orange color) - 1 sittigai
14. Water - as per need
Method
1. Heat oil in a vanali
2. Add bay leaves, grambu & pattai – one by one & fry
3. Remove grambu & pattai from vanali
4. Add onion and fry till it becomes soft - 2 minutes
5. Add Injhi & Poondu paste & fry till the raw smell goes – 5 minutes
6. Add Pudhina leaves & continue frying – 2 minutes
7. Add finely chopped tomatoes & fry for 4 more minutes
8. Add pachchai milagai – and fry for 1 minute
9. Now add salt ( remember to add for the rice also)
10. Now remove the vanali from fire & mix the rice thoroughly with the masala cooked
11. Add the fried pattai & grambu to the mix
12. Transfer the contents to a pressure cooker
13. Add sufficient water ; add the food color , mix well and close the lid
14. Cook till it becomes OK ( 1 or 2 whistles is OK)
15. This is to be served hot with Onion raitha
Note : Those who opt for KARAM ( spicy ) may add 2 more green chillies or a teaspoon of Sigappu milagai podi
Ramesh on 27 June 2008
Add comment Sunday,June 29, 2008
பருப்பு சாதம்
தேவையான பொருட்கள்அரிசி – 200 கிராம் துவரம்பருப்பு – 100 கிராம்
உரித்த சின்ன வெங்காயம் – 10 – 12 கறிவேப்பிலை – கொஞ்சம்
உரித்த பூண்டு – 10 – 12 மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 1/2 டீஸ்பூன்
சிகப்பு மிளகாய் – 7 எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்; தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
6. நன்றாக கலக்கி மூடிவைக்கவும்.
7. அனலைக் குறைத்து, குக்கரின் வெயிட் (weight) போட்டு 10 முதல் 12 நிமிடங்கள் வேகவைக்கவும்.
8. மூடியை திறந்ததும், உருக்கிய நெய்யையும், தேங்காய் எண்ணையையும் சேர்த்து, சூடாகப் பரிமாறவும்.
சமீபத்தில் சென்னைக்கு வந்த போது ரமேஷ் சொன்ன ஒரு புதிய சாதம். செய்து பாருங்கள், சுவை பிரமாதமாக இருக்கிறது.
ராஜப்பா
1 comment Sunday,December 30, 2007
Vadai Curry
வடைகறி
பொருட்கள்
பருப்பு வடை – 10 (செய்முறை எழுதவில்லை)
வெங்காயம் -2 நறுக்கியது, தக்காளி – 3, பூண்டு – 8, மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள், இஞ்சி 1/2”, பட்டை 1/2”, ஏலக்காய் – 2, கிராம்பு – 1, பச்சை மிளகாய் – 2, முந்திரி – 6, வேர்க்கடலை – 10
விழுதாக அரைக்க:
1/2 வெங்காயம், தக்காளி, 4 பூண்டு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, பச்சைமிளகாய், முந்திரி, வேர்க்கடலை இவை யாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும், பிரிஞ்சி இலை, மீதி வெங்காயம், தக்காளி, 4 முழுப் பூண்டு இவைகளை வதக்கவும்.
அரைத்த மசாலா விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, சிறிது தண்ணீரில் வேகவிடவும். தேங்காய்ப் பாலும் சேர்க்கலாம்.
க்ரேவி நன்கு வந்தவுடன், வடைகளை சிறிதாக பிய்த்து அதில் போடவும்.
வடைகள் க்ரேவியுடன் ஊறும் வரை குறைந்த தீயில் வைக்கவும்.
கொத்துமல்லி தழை போட்டு இறக்கவும்.
இட்லி, தோசையுடன் சாப்பிட வடைகறி சிறந்தது.
ராஜப்பா
11-10-2006 18:50 மணி
Add comment Saturday,October 21, 2006